Pages

Thursday, January 27, 2011

சிந்திக்க வைத்த புத்தாண்டு வாழ்த்துகள்

என்னுடைய குடும்ப நண்பர் ஒருவர் , இதை எனக்கு இமெயிலில் அனுப்பினார்.
(நன்றி: திரு. ஆறுமுகம் , திரு.சுப்ரமணியன் )
படிக்க, சிந்திக்க:

உறவுகள் மேம்பட
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்....
குடும்பத்திலும் சரி  அலுவகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகமல் இருக்கவும் கடைப்பிடிக்க வேண்டியவை.

-=-==============================================================

  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
  • அர்த்தமில்லாமலும், பின் விளைவுகளை அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள்.
  • எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுங்கள். விட்டுக் கொடுங்கள்
  • சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்.
  • நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
  • உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்லவும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
  • மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
  • அளவுக்கதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
  • எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களை அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிரூக்காதீர்கள்.
  • கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்
  • அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
  • உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
  • மற்றவர் கருத்துகளில் செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்
  • மற்றவர்களுக்குரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
  • புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்துகொள்ளாதீர்கள்.
  • பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும்  காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
  • அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
  • பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.
சென்ற 2010-ஆம் ஆண்டில் நாம் கடைப்பிடிக்கவிட்டுப் போனவற்றை 2011-ஆம் ஆண்டில் கடைப் பிடிப்போம்.
வெ.சுப்பிரமணியன்
ஓம்

2 comments: